'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா'
சென்னையில்,தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் நாட்களில் கலை பண்பாட்டுத்துறை சார்பில்
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்கிற பிரம்மாண்ட கலைவிழா கடந்த மூன்று
ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் சென்னை சங்கமம்- நம்ம
ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை சென்னையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 13.1.2025 அன்று மாலை 6.00 மணியளவில் கீழ்ப்பாக்கம்
பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையியில் உள்ள ஏகாம்பர நாதர் திடலில் தொடங்கி
வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை
மாற்றத் துறை அமைச்சர் திருதங்கம்தென்னரசு, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியம், மாண்புமிகு இந்து சமய
அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு, தூத்துக்குடி நாடளுமன்ற உறுப்பினர்
திருமதி கனிமொழி, மாநகர மேயர் திருமதி ஆர்.பிரியா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 260 கலைஞர்கள் பிரமாண்ட மேடையில் வழங்கிய
நிகழ்ச்சியினை முழுவதும் கண்டு களித்து, நிகழ்ச்சி நடத்திய கலைஞர்களுக்கு நினைவுப்
பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
தொடக்கவிழா நிகழ்ச்சியினை 5000-க்கும் மேற்பட்ட
பொதுமக்கள் நேரிலும், இணையம் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக மேற்பட்ட பொதுமக்கள்
கண்டுகளித்தனர். 1,00,000-க்கும் 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா' கலை
நிகழ்ச்சிகள், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா
அண்ணாமலைபுரம் அரசு இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர்
திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத்
திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா. நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல்.
எழும்பூர் அரசு அருங்காட்சியகம். கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில்
உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன்
பூங்கா.
அண்ணாநகர் கோபுரப் பூங்கா. கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா. கே.கே.நகர் சிவன்
பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு
மைதானம், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் 14.1.2025 முதல்
17.1.2025 வரை நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற்றது.
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில்' தமிழ்நாட்டின் பல்வேறு
மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1000க்கும் மேற்பட்ட கலைஞர்கள்
பங்கேற்றனர். நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம்,
தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம்,
சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம்,
சிலம்பாட்டம். மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து,
பாவைக்கூத்து. தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும்
மேற்பட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இத்துடன் புகழ்பெற்ற 8
பரதநாட்டிய குழுக்கள், 8 குரலிசை குழுக்கள், 16 இசைக்குழுக்கள் கேரளாவின் தைய்யம்
நடனம். மகாராஷ்டிராவின் லாவணி நடனம். ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம்
தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்ராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய அயல்
மாநில கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியின் இறுதி நாளான 17.01.2025 அன்று
அண்ணாநகர் கோபுர பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
புரிசை சம்பந்த தம்பிரான் குழுவினரின்
தெருக்கூத்து. விழுப்புரம் மாற்று திறனாளிகள் கலைக்குழுவினரின் மல்லர் கம்பம்,
உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து கலைஞர்களுக்கு பொன்னடை அணிவித்து
பாராட்டினார்கள்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைத்து சுலைஞர்களுக்கும் மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நாளொன்றுக்கு ரூ.5000/- வீதம்
மதிப்பூதியம் அளிக்கப்பட்டது. அனைத்து கலைஞர்களுக்கும் போக்குவரத்து வசதி, உணவு
வசதி இவற்றுடன் இரண்டு புதிய ஆடைகள் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டு
சான்றிதழ் வழங்கப்பட்டன.
விழா நடைபெற்ற இடங்களில் பிரபல உணவகங்களின் சுவையான
பராம்பரிய உணவு வகைகள் விற்பனை செய்யும் உணவு திருவிழாவும் நடத்தப்பட்டது.
பூம்புகார் நிறுவனத்தின் வாயிலாக கைவினைப்பொருட்கள் விற்பனைக்கூடங்களும்
அமைக்கப்பட்டன. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழும்
வாய்ப்புகளும் பார்வையாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை சங்கமம்
நிகழ்ச்சியினை திரளான பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் செய்தி மக்கள்
தொடர்புதுறையின் வாயிலாக கலை நிகழ்ச்சிகள் நேரலையிலும், யூ-டியூப் வாயிலாக
இணையத்திலும் இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும் 75000
க்கும் மேற்பட்டவர்கள் நேரில் கண்டுகளித்தனர். முகநூல். இன்ஸ்டாகிராம். எக்ஸ் தளம்,
யூ-டியூப் வாயிலாக இலட்சக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சிகளை கண்டு இணையத்திலும்
ஒளிபரப்பப்பட்டது. 18 களித்துள்ளனர். சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா திருவிழா
நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம்,
தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய எட்டு நகரங்களிலும் இந்த
ஆண்டு சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.