பேரறிஞர் அண்ணா அவர்களின் 56 வது நினைவு
நாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு. க. ஸ்டாலின் அவர்கள்
வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு.
அண்ணா வழியில் அயராது உழைப்போம்! தந்தை பெரியார்
குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது: "எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச்
சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும்.
அதிலே அவர் கண்ட வெற்றி
மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை; இன்று
அனைவரும் பெற்றுள்ளனர்." தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து
நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்!
நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது! வம்பிழுக்கும் வீணர்கள்
தெம்பிழந்து ஓடுவார்கள்: நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப்
பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்!