மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்
திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நுங்கம்பாக்கம் காம்தார் நகர், முதன்மைச் சாலைக்கு
புதிதாகப் பெயர் சூட்டப்பட்ட "எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை" யின் பெயர் பலகையை
திறந்து வைத்தார். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின்
அவர்கள் இன்று (11.2.2025) தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் காம்தார் நகர்,
முதன்மை சாலைக்கு புதிதாகப் பெயர் சூட்டப்பட்ட "எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை" யின்
பெயர்ப் பலகையை திறந்து வைத்தார்.
திரை இசைப் பாடகர் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம்
அவர்கள் பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய
இனிய குரலால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு
இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக தமிழ்நாட்டு மக்கள்
மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் புகழ்பெற்ற பாடகராக திகழ்ந்தார்.
இவர் ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகளைப் பெற்றுள்ளார்.
முத்தமிழறிஞர்
கலைஞர் அவர்களின் அன்பிற்குரியவரான அவர், கடந்த 25.9.2020 அன்று நம்மை விட்டுப்
பிரிந்தார். காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்
பெற்றவர் எனக் குறிப்பிட்டு திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் தமிழ்த்
திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும்
சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம்,
காம்தார் நகர் முதன்மைச் சாலைக்கு "எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை" எனப் பெயரிடப்படும்
என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு. அரசாணை
வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை
மண்டலம், நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதன்மைச் சாலைக்கு புதிதாகப் பெயர்
சூட்டப்பட்ட "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" யின் பெயர்ப்பலகையினை மாண்புமிகு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து திரையிசைப் பாடகர் மறைந்த திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின்
இல்லத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு,
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
திரு.மா.சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்
திரு.பி.கே.சேகர்பாபு. பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா,
சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார்.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., நிலைக்குழுத்
தலைவர் (பணிகள்) திரு.நே.சிற்றரசு, துணை ஆணையாளர் (பணிகள்)
திரு.வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர்
திரு.கே.ஜெ.பிரவீன் குமார். இ.ஆ.ப., மண்டலக் குழுத் தலைவர் திரு.எஸ்.மதன்மோகன்,
மற்றும் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குடும்பத்தினர் திருமதி
எஸ்.பி.பி.சாவித்திரி (மனைவி), திரு.எஸ்.பி.பி.சரண் (மகன்), திருமதி
எஸ்.பி.பி.பல்லவி (மகள்), திருமதி எஸ்.பி.சைலஜா (சகோதரி) ஆகியோர் உள்பட
குடும்பத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள்
தொடர்புத்துறை, சென்னை-9