ஒன்றிய அரசு நிதிகுறித்து மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-24ஆம் ஆண்டிற்கான நான்காம் தவணை நிதி ரூபாய் 249 கோடியும், 2024-25ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 2,152 கோடியும் ஒன்றிய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். 

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டமானது 2018ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காகத் திட்ட ஏற்பளிப்பு குழுவால் ஒப்பளிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியானது. ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் என்ற பகிர்வு முறையில் விடுவிப்பு செய்யப்படுகிறது. அதன்படி, 2024-25ஆம் நிதியாண்டில் திட்ட ஏற்பளிப்பு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றிய அரசின் 60% பங்கான খ.2,152 கோடி நிதியினை தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. 2023-24ஆம் ஆண்டுக்குத் தமிழ்நாட்டிற்கென ரூ. 3,533 கோடி திட்ட ஏற்பளிப்பு குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 இந்நிதியில் இரண்டு தவணைகள் மட்டுமே விடுவிக்கப்பட்ட நிலையில், மூன்றாம் தவணை விடுவிப்பதற்கு முன்பாக ஒன்றிய அரசு PM SHRI பள்ளிகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால் மட்டுமே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் நிதியினை விடுவிக்க முடியும் என வலியுறுத்தியது. PM SHRI பள்ளிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வது சார்ந்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும் எனவும், அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அவர்களால் 23.02.2024 அன்று கடிதம் அனுப்பப்பட்டது. PM SHRI பள்ளிகள் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது. 

தனது அறிக்கையில் PM SHRI பள்ளிகள் உருவாக்குவதற்கான வலியுறுத்தி உள்ளது. இந்த நிபந்தனையானது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் கல்வி முறைக்கு முரணாக உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே. PM ஏற்படுத்துவதையும், SHRI ஏற்கனவே பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்டக்கூறுகளைச் செயல்படுத்துவதையும் ஒன்றாகக் கருதாமல், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட நிதியினை விடுவிக்குமாறு ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும், 2024-25ஆம் நிதியாண்டில் திட்ட ஏற்பளிப்பு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றிய அரசின் 60% பங்கான ரூ. 2,152 கோடி நிதியினை தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை.

 மேலும், ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்துப் பிற மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ. 17,632.41 கோடி நிதியினை ஒன்றிய அரசு விடுத்துள்ளது. எனவே, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-24ஆம் ஆண்டிற்கான நான்காம் தவணை நிதி ரூபாய் 249 கோடியும், 2024-25ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 2,152 கோடியும் ஒன்றிய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். 

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 அரசின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள: tndiprnews Indiprtndipr TN DIPR www.dipr.tn.gov.in TNDIPR, Govt. of Tamil Nadu 2புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல் நிபந்தனையாக மும்மொழி கொள்கையினை பின்பற்றுவதை வலியுறுத்தி உள்ளது. இந்த நிபந்தனையானது தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் கல்வி முறைக்கு முரணாக உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே. PM ஏற்படுத்துவதையும், SHRI ஏற்கனவே பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்டக்கூறுகளைச் செயல்படுத்துவதையும் ஒன்றாகக் கருதாமல், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட நிதியினை விடுவிக்குமாறு ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும், 2024-25ஆம் நிதியாண்டில் திட்ட ஏற்பளிப்பு குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றிய அரசின் 60% பங்கான ரூ. 2,152 கோடி நிதியினை தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. மேலும், ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களின்படி, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்துப் பிற மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ. 17,632.41 கோடி நிதியினை ஒன்றிய அரசு விடுத்துள்ளது. எனவே, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-24ஆம் ஆண்டிற்கான நான்காம் தவணை நிதி ரூபாய் 249 கோடியும், 2024-25ஆம் ஆண்டிற்கான நிதி ரூபாய் 2,152 கோடியும் ஒன்றிய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.