இசை மேதை பீத்தோவன்
திருக்குறள்:
பால்:பொருட்பால். இயல்:குடியியல் அதிகாரம்: பண்புடைமை குறள் எண்:998 நண்புஆற்றா
ராகி நயம்இல செய்வார்க்கும் பண்புஆற்றார் ஆதல் கடை. பொருள்: நட்புக் கொள்ளாமல் தீமை
செய்வாரிடத்தும் பண்புடன் பழகாமை இழிவாகும்.
பழமொழி :
சூழ்நிலை மனிதனை உருவாக்குகிறது. A man is created by the environment
இரண்டொழுக்க பண்புகள் :
1. வாழ்விற்கு வழிகாட்டும் பெரியவர்களை எதிர்த்துப் பேசமாட்டேன். 2. என்னை விட
வயதில் சிறியவர்களை பாசமோடு நடத்துவேன். அவர்கள் மீது அதிகாரம் செலுத்த மாட்டேன்.
பொன்மொழி :
நீ வெற்றிக்காக போராடும் போது வீண்முயற்சி என்று சொல்பவர்கள், நீ வெற்றி பெற்ற பின்
விடாமுயற்சி என்பார்கள். ---கண்ணதாசன்
பொது அறிவு :
1. ஆதார் கார்டு முதலில் எந்த மாநிலத்தில் உருவாக்கப்பட்டது? விடை: மகாராஷ்டிரா. 2.
பாம்பின் வாயில் எத்தனை பற்கள் உள்ளன? விடை : 200 பற்கள்
English words & meanings :
Cough. - இருமல் Diarrhea. - வயிற்றுப்போக்கு/ பேதி வேளாண்மையும் வாழ்வும் :
குழாயில் நீர்க் கசிவு இருப்பின் பிளம்பரை அழைத்து வந்து உடனே சரி செய்யுங்கள்.
மார்ச் 26 லூடுவிக் வான் பேத்தோவன் அவர்களின் நினைவுநாள்
லூடுவிக் வான் பேத்தோவன் (Ludwig van Beethoven, /ˈlʊdvɪɡ væn ˈbeɪˌtoʊvən/ (About
this soundகேட்க); 1770 - மார்ச் 26, 1827)[1] அவர்கள் செருமனியைச் சேர்ந்த ஒரு
புகழ் பெற்ற மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் ஆவார். இவர் செருமனியில் உள்ள பான்
என்னும் நகரில் பிறந்தார். பியானோ கருவிக்காகவும் பிற இசைக் கருவிகளுக்காகவும்
சேர்ந்திசை நிகழ்வுகளுக்காகவும் பல செவ்விசை ஆக்கங்கள் செய்துள்ளார். மேற்கத்திய
கலை இலக்கியத்தில் மரபார்ந்த மற்றும் காதல்சார் காலகட்டங்களுக்கு இடையில் ஒரு
முக்கியமான இசைக் கலைஞராக இவர் கருதப்பட்டார். அனைத்து இசையமைப்பாளர்களிடமும் மிக
பிரபலமான மற்றும் செல்வாக்கு மிகுந்த ஒரு நபராகவும் அறியப்பட்டார். இவர் ஒரு சிறந்த
பியானோ வாசிக்கும் கலைஞரும், வயலின் வாசிக்கும் கலைஞரும் ஆவார். இவர் ஒரு சிறந்த
இசையமைப்பாளராகவும் இருந்தார். இவருடைய சிம்ஃபனி என்னும் ஒத்தினி இசையில்
ஐந்தாவதும் ஒன்பதாவதும் ஒரு வயலின் இசைவடிவம், 32 பியானோ தனியிசை வடிவங்கள், 16
நரம்பிசை வடிவங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும். சுமார் 1801 ஆம் ஆண்டு வாக்கில்
இவருக்கு சிறுகச் சிறுக காது செவிடாகத் தொடங்கியது. 1817ல் இவர் முற்றுமாய்
செவிடாகிவிட்டார். எனினும் இவர் இக்காலத்தே மிகவும் சிறந்த இசை ஆக்கங்களைச்
செய்துள்ளார்.
நீதிக்கதை பஞ்சவர்ணக் கிளிக்குஞ்சுகள்
மிகப் பெரிய பேரரசர் ஒருவருக்கு, சீன நாட்டு அறிஞர் ஒருவர் இரண்டு பஞ்சவர்ணக்
கிளிக்குஞ்சுகளை பரிசளித்தார். பஞ்சவர்ணக் கிளியை, அதிர்ஷ்டத்தின் அடையாளமாக
கருதுவர் என்பதால், பேரரசர் அகமகிழ்ந்து தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை
அழைத்து “இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி பறப்பதற்கு
பயிற்சியளியுங்கள்!” என்றுஎன்று கட்டளையிட்டார். மாதங்கள் உருண்டோடின. பறவைகள்
எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று தெரிந்துகொள்ள பயிற்சியாளரை
அழைத்தார் பேரரசர். “அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க
கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும்
கிளையைவிட்டு நகர மறுக்கிறது” என்று கூறினார் பயிற்சியாளர். உடனே பேரரசர், தனது
நாட்டில் உள்ள புகழ்பெற்ற கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும்
அழைத்து, பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு
கட்டளையிட்டார். அவர்களும் அதை முற்றிலும் பரிசோதித்துவிட்டு, “இந்த பறவையிடம் எந்த
குறையுமில்லை. உடலில் எந்தக் குறையுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று
புரியவில்லை அரசே” என்றனர். “இதற்கு என்ன ஆயிற்று, ஏன் பறக்க மறுக்கிறது என்று
தெரியவில்லையே? நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலைசெய்யும் விவசாயிகள் அல்லது
மூத்த குடிமக்கள் எவரையேனும் அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு ஒருவேளை
இது பறக்க மறுப்பதன் காரணம் தெரிந்திருக்கலாம்” என்று கருதி உடனே காவலர்களை
அழைத்து, “நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து
வாருங்கள்” என்று கட்டளையிட்டார் பேரரசர். அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த
பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்து கொண்டிருப்பதை பார்த்தார்
பேரரசருக்கு ஒரே மகிழ்ச்சி.. “இந்த அற்புதத்தைச் செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!”
என்றார். அந்த விவசாயி பேரரசர் முன்பு வந்து பணிந்து நின்றார். “எல்லாரும்
முயற்சிசெய்து தோற்றுவிட்ட நிலையில், நீ மட்டும் கிளியை எப்படி பறக்கச் செய்தாய்?”
என பேரரசர் பேரரசரை வணங்கியபடியே விவசாயி சொன்னார், “அது ரொம்ப சுலபமான காரியம்
அரசே. மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டிவிட்டேன்.
வேறொன்றுமில்லை!” என்று சொன்னார். நீதி :இயற்கையும் சில சமயம் அந்த விவசாயி போல,
நாம், நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம் அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடும்.
அது நமது நன்மைக்கே, நம் சக்தியை, ஆற்றலை, நாம் உணரவேண்டும் என்பதற்காகவே.
இன்றைய
செய்திகள் 26.03.2025
ஆன்லைன் முன்பதிவை ஊக்குவிக்க பயணிகளுக்கு சிறப்பு பரிசு:
அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.
தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளின்
சுங்கக்கட்டணம் வரும் ஏப்.1-ம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள்
ஆணையம் அறிவித்துள்ளது. * அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டறியும் முழு
பரிசோதனை மையங்கள், நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்
இன்னும் 10 நாட்களில் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தை பாகிஸ்தான் தொடர்ந்து சட்டவிரோதமாக
ஆக்கிரமித்து வருவதாகவும், அதிலிருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும்
என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
நியூஸிலாந்தில்
நிலநடுக்கம்: ரிக்டரில் 6.7 ஆக பதிவு.
கேலோ இந்தியா பாரா விளையாட்டு:
பளுதூக்குதலில் தேசிய சாதனை படைத்தனர் ஜாண்டு குமார் மற்றும் சீமா ரானி.
2026
உலகக்கோப்பை கால்பந்து போட்டி: தகுதிச் சுற்று போட்டியில் நியூசிலாந்து அணி தகுதி.
Today's Headlines
To encourage online booking reservation scheme, The Tamil Nadu State Transport
Corporation has announced special lucky draw
Toll Fees at 40 Toll Plazas in
Tamil Nadu to be Increased from April 1st: National Highways Authority of India
Announced.
Comprehensive Screening Centers to Detect All Types of Cancer to be
Launched in All Districts of Tamil Nadu Within 10 Days: Minister Ma.
Subramanian. This method is first in the Country.
India Urges at the United
Nations that Pakistan Continues to Illegally Occupy the Jammu and Kashmir Region
and Should Vacate it Immediately.
Earthquake in New Zealand: Recorded 6.7 on
the Richter Scale.
Khelo India Para Games: Jaandu Kumar and Seema Rani Set
National Records in Weightlifting.
2026 World Cup Football: New Zealand Team
Qualifies for the Qualifying Round.