தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்
தலைவராக திரு.நா.இளையராஜா நியமனம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும்
மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 1974 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு,
தொடர்ந்து இயங்கி வருகிறது. தாட்கோவின் கட்டுமானப் பிரிவினால் வீடற்ற
ஆதிதிராவிடர்களுக்குத் தீப்பிடிக்காத வீடுகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமுதாயக்
கூடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளையும், மேம்பாட்டுப் பிரிவால் ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியின மக்களின் தேவைக்கேற்ப பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத்
திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது. தமிழ்நாடு ஆதிதிராவிடர்
வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக திரு.நா.இளையராஜா அவர்களை
நியமித்து அரசாணை (ப) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
நாள்.28.03.2025இல் வெளியிடப்பட்டுள்ளது. 6.110. ஆணை