சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை, தீவுத்திடலில் ரூ.113 கோடி
மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி
மையம் உள்ளடக்கிய பொது சதுக்கப் பணிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.
மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.3.2025) சென்னை, தீவுத்திடலில்,
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 113 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் 1.63,039 சதுர அடி கட்டடப் பரப்பளவில் நவீன
தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மையத்தை உள்ளடக்கிய பொது சதுக்கப் பணிகளை
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னையின் முக்கிய அடையாளமாகிய நேப்பியர்
பாலத்தின் அருகில் தீவுத்திடலில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் வீட்டுவசதி மற்றும்
நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 113
கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கண்காட்சி மையம்
உள்ளடக்கிய பொது சதுக்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி மையம், நமது
பாரம்பரியமிக்க கட்டடக்கலை அமைப்புடன், 40 கண்காட்சி அரங்குகள், பொது நிகழ்ச்சி
கூடங்கள். உணவகங்கள், 8 மின் தூக்கி வசதிகள். 148 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும்
148 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதிகள் மற்றும் 200 நவீன கழிப்பிட
வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இக்கண்காட்சி மையம்.
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன்
நிரந்தர மையமாக அமைக்கப்படுவதால், அரசின் பல்வேறு துறைகளின் செலவினங்கள்
குறைக்கப்படுவதுடன், மக்களுக்கு தேவையான, அனைத்து மேம்பட்ட வசதிகளுடன்
அமைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம். அரசு துறைகளின் கண்காட்சிகள், கருத்தரங்குகள்,
பண்பாட்டு நிகழ்ச்சிகள் போன்ற அனைத்து பொது நிகழ்ச்சிகளும் இம்மையத்தில்
நடத்தப்படும்.இந்த ஆய்வின்போது, மாண்புமிகு வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி,
மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர்
வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி
மேயர் திருமதி ஆர். பிரியா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல்
தலைமைச் செயலாளர் திருமதி. காகர்லா உஷா. இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம்
மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.அன்சுல் மிஸ்ரா இ.ஆ.ப., சென்னைப்
பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் திரு. அ.சிவஞானம், இ.ஆ.ப.,
மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.