ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) அறிவிக்கை எண்.01/2024 நாள் 30.01.2024 அடங்கிய பதவிகளுக்கான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-IV (தொகுதி-IV பணிகள்)-ன்
தேர்வுமுடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 28.10.2024
அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர்/ இளநிலை
உதவியாளர் / வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கான முதல் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு
மற்றும் கலந்தாய்வு 22.01.2025 முதல் 17.02.2025 வரை நடை பெற்றது. முதல் கட்ட
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வின் முடிவில் உள்ள காலிப்பணியிடங்களை
நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு
வரும் 28.03.2025 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண்.3, தேர்வாணையச்
சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்),
சென்னை-600003-ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மேற்குறிப்பிட்ட
இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட
தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in)
வெளியிடப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான
இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம்
மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான
(www.tnpsc.gov.in)லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இரண்டாம் கட்ட
மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு
அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே
தெரிவிக்கப்படும். இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும்
கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டது எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக
அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை 18.03.2025 முதல் 22.03.2025 வரை
தேர்வாணைய இணைய தளத்தின் ஒரு முறைப் பதிவு பிரிவின் (One Time Registration
Platform) மூலம் பதிவேற்றம் செய்யலாம். இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு
அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள்
என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும்
நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது
எனவும் தெரிவிக்கப்படுகிறது.