உலக ஈமோஃபீலியா நாள்
திருக்குறள்:
பால்: பொருட்பால் இயல் :குடியியல் அதிகாரம்: உழவு குறள் எண்: 1032 உழுவார்
உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து,
பொருள்:
உழவுத் தொழிலை தவிர்த்து பிற தொழில் புரிகின்றவர்களையும் உழவு தாங்குதலால் அது
உலகத்தவர்க்கு அச்சாணியாகும்.
பழமொழி :
சுறுசுறுப்பு வெற்றி தரும். Briskness will bring success.
இரண்டொழுக்க பண்புகள் :
வீண் விளையாட்டு வினையாகும் என்ற பழமொழியை அறிவேன் எனவே விளையாடும் இடங்களிலும்,
விளையாடும் விதங்களிலும் மிகவும் கவனமாக இருப்பேன்.
பெற்றோருக்கு தெரியாமல்
யாருடைய வாகனங்களிலும் ஏறி செல்ல மாட்டேன். விடுமுறை காலங்களில் ஆபத்து நிறைந்த
ஆறு, குளம், குட்டைகளில் பெரியவர்கள் துணையின்றி குளிக்க செல்ல மாட்டேன்.
பொன்மொழி :
நீ சுமக்கின்ற நம்பிக்கை நீ விழும் போது உன்னை சுமக்கும். பொது அறிவு :
1. காமராஜரை
கல்விக்கண் திறந்தவர் என மனதார பாராட்டியவர் யார்? விடை: தந்தை பெரியார்.
2. மஞ்சள்
காமாலை நோய்க்கு சிறந்த மருந்து எது? விடை: கீழாநெல்லி
English words & meanings :
Bride. - மணமகள் Candle. - மெழுகுவர்த்தி வேளாண்மையும் வாழ்வும் : நீர்
பாதுகாப்பில் மற்றொரு உத்தி நிலத்தடி நீர் ஆதாரங்களை பாதுகாப்பதாகும்.
ஏப்ரல் 17 உலக ஈமோஃபீலியா நாள்
ஈமோஃபீலியா (Haemophilia அல்லது Hemophilia) என்பது, மனித உடலில் குருதி உறையாமல்
போகும் பரம்பரை நோயின் பெயராகும். மரபணு குறைபாடுகளின் காரணமாக (அல்லது, மிக அரிதான
சமயங்களில், தன்னுடல் தாக்குநோய் (autoimmune disorder) காரணமாக இரத்தத்தை உறையச்
செய்யும் குருதி நீர்மக் (Plasma) காரணிகளின் செயல்பாடு குன்றுவதால், இந் நோய்
உண்டாகிறது. உடலில், உள் மற்றும் வெளிக் காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறையாமல்
தொடர்ந்து குருதிப்பெருக்கு ஏற்படுவதால் உயிர் அபாயம் உள்ள நோய்களில் இதுவும்
ஒன்று.
நீதிக்கதை நரித் தந்திரம்!
ஒரு காடு. அங்கே ஒரு சிங்கம். அந்தச் சிங்கம் ஒரு கூட்டம் போட்டது. எல்லா
மிருகங்களும் வந்தன. முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டது. ‘’இப்படிக் கிட்டே வா…என்
உடம்பை முகர்ந்து பார்…எப்படி இருக்கு?’’என்று கேட்டது. குரங்கு வந்து முகர்ந்து
பார்த்து விட்டு …’’வாசனை நல்லா இல்லீங்க… கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு!’’என்றது.
சிங்கத்துக்கு கோபம் வந்து விட்டது. ‘’என் உடம்பைப் பத்தியா அப்படிச் சொல்றே’’ன்னு
ஓங்கி ஒரு அறை விட்டது. குரங்கு சுருண்டு விழுந்துவிட்டது. அடுத்து ஒரு கரடியைக்
கூப்பிட்டது…. ‘’நீ வா…வந்து பார்த்துட்டு சொல்லு’’ என்றது. கரடி….அந்தக் குரங்கைப்
பார்த்துக் கொண்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்து…’’ஆகா …ரோஜாப்பூ வாசனை!’’
என்றது. "பொய்யா சொல்றே?ன்னு சிங்கம் ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் சுருண்டு
விழுந்தது. அடுத்த படியாக ஒரு நரியைக் கூப்பிட்டது. ‘’நீ வந்து சொல்லு…நீதான்
சரியாச் சொல்லுவே!’’ என்றது சிங்கம். நரி…குரங்கையும் கரடியையும் பார்த்துக் கொண்டே
வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்தது. அப்புறம் கூறியது, ‘’மன்னிக்கணும் தலைவா,
எனக்கு மூணு நாளா ஜலதோஷம்!’’ நரி தன் தந்திரமான குணத்தாலும், சமயோசித புத்தியாலும்
தப்பித்தது.
இன்றைய செய்திகள் 17.04.2025
அரசாணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று அரசுத் துறை செயலாளர்களுக்கு
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில்
நாளை முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
பச்சிளம் குழந்தை காணாமல் போனால் மருத்துவமனை உரிமத்தை ரத்து
செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம்.
2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 85,000 விசாக்களை
இந்தியர்களுக்கு வாரி வழங்கியுள்ளது சீனா.
இந்திய ஓபன் தடகளம் 2025: ஈட்டி
எறிதலில் பட்டம் வென்றார் யஷ் வீர் சிங்.
பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: டென்மார்க்
வீரர் ஹோல்கர் ரூனே காலிறுதிக்கு முன்னேற்றம்.
Today's Headlines
The Secretary of the Tamil Development and News Department has ordered all
government department secretaries to issue government orders only in Tamil from
now on.
The Meteorological Department has reported that the temperature will
increase in Tamil Nadu for the next three days starting tomorrow. The public is
advised to be cautious regarding the heatwave.
The Supreme Court has issued a
strict order stating that the license of the concerned hospital must be canceled
if a newborn child goes missing.
China has issued 85,000 visas to Indians in
the four months from January to April 2025. This is seen as a significant move
in the relationship between the two countries. .
Indian Open Athletics: Yash
Veer Singh has won the gold medal in the javelin throw event at the Indian Open
Athletics Championships.
Barcelona Open Tennis: Danish player Holger Rune has
advanced to the quarterfinals of the Barcelona Open Tennis tournament. He is
displaying excellent performance.