பத்தாம் வகுப்பு தேர்வு இன்று நிறைவு: மே 19-இல் முடிவுகள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செவ்வாய்க் கிழமையுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் மே
19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில்
பத்தாம் வகுப்புக் கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கி யது. இந்தத்
தேர்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதுவரை மொழிப்
பாடங் கள், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நிறைவு பெற்றுள்ளன.
இந்நிலையில், இறுதித் தேர்வாக சமூக அறிவியல் பாடத் துக்கான தேர்வு செவ்வாய்க்கிழமை
நடைபெறவுள்ளது. இந் தத் தேர்வுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைகிறது.
தொடர்ந்து மாணவர்களின் விடைத்தாள்கள் ஏப்.17- ஆம் தேதி விடைத்தாள் திருத்தும்
முகாம்களுக்குக் கொண்டு வரப்படவுள்ளன. மேலும் ஏப்.21-ஆம் தேதி முதன்மை விடைத்தாள்
திருத் தும் பணியில், ஏற்கெனவே பொதுத் தேர்வுக்கான விடைத் தாள் திருத்தும் பணியில்
அனுபவம் மிக்க ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கவுள்ளனர். அதனைத்
தொடர்ந்து, உதவி விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஏப் ரல் 22-ஆம் தேதி முதல்
30-ஆம் தேதிக்குள் விடைத்தாள் களை மதிப்பீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதைய
டுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி மே 19-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின்
முடிவுகள் வெளியிடப்படவுள்ள